Oct 29, 2024 - 04:08 PM -
0
ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை நடைமுறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும், தொழில்முனைவோருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
பொல்பித்திகம தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, சர்வஜன அதிகாரத்தின் தெவுந்தர, அக்குரெஸ்ஸ, மாத்தறை, தெனியாய ஆகிய தொகுதிகளுக்கான அமைப்பாளர்கள் நியமனம் இன்று (29) காலை கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, உரையாற்றிய திலித் ஜயவீர, மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் சர்வஜன அதிகாரத்திற்கு உண்டு என்றார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த திலித் ஜயவீர,