செய்திகள்
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வௌியான அறிவிப்பு!

Oct 30, 2024 - 11:31 AM -

0

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வௌியான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர  உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


அத்தோடு, குறித்த பரீட்சையானது ஒத்திவைக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


2024 உயர்தரப் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து மாத்திரம் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளார்.


இன்று (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05