மலையகம்
இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

Oct 30, 2024 - 04:31 PM -

0

இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ, பொகவானை பகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயவில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (29) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவானை தோட்ட பகுதியில் உப மின் நிலையத்தின் அருகாமையில் உள்ள ஓயவில் சடலம் ஒன்று தலைகீழாக மிதந்து கொண்டிருப்பதை கால் நடைகளுக்கு புல் அறுக்க சென்ற நபர் ஒருவரினால் குறித்த சடலம் மிதந்து கொண்டிருப்பதை இனங்கண்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இது தற்கொலையா அல்லது கொலையா என பல கோணங்களில் விசாரனைகளை ஆரம்பித்துள்ளது பொலிஸார், உயிரிழந்தவர் 35 மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05