Oct 31, 2024 - 12:22 PM -
0
மீகொடை, படவல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது இன்று (31) அதிகாலை இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், வர்த்தகரை அச்சுறுத்துவதற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.