செய்திகள்
காலிமுகத்திடலுக்கு அருகில் கோர விபத்து

Oct 31, 2024 - 06:07 PM -

0

காலிமுகத்திடலுக்கு அருகில் கோர விபத்து

காலிமுகத்திடலுக்கு அருகில் இன்று (31) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 07 பேர் காயமடைந்துள்ளனர்.

 

முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 05 பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05