Nov 1, 2024 - 04:48 PM -
0
உண்மையான எதிர்க்கட்சியின் பொறுப்புக்களை நிறைவேற்ற துணிச்சலான எதிர்க்கட்சியாக தமது குழு தயாராக இருப்பதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர், தொழில்முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
சர்வஜன அதிகாரத்தின் களனி தொகுதி சபையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சர்வஜன அதிகாரத்தின் களனி தொகுதி சபைக் கூட்டம் நேற்று (31) பிற்பகல் கட்சியின் தலைவர் தொழில் முனைவோர் திலித் ஜயவீர தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய அவர்,
"எங்களுக்கு எதிர்க்கட்சி தேவை. பஸ் ஓட்டும் எதிர்க்கட்சி அல்ல. இது துணிச்சலான எதிர்க்கட்சி. இந்த துணிச்சலான எதிர்க்கட்சி எதிர்க்கட்சியிலேயே இருக்க வரவில்லை. துணிச்சலாக ஆட்சியை பிடிக்க வருகிறது. காலைவாரி அல்ல.