Nov 1, 2024 - 08:18 PM -
0
இம்முறை பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,259 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 123 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளில் வன்முறை தொடர்பான 13 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனினும், கிடைக்கப்பெற்றுள்ள 1,259 முறைப்பாடுகளில் 1,018 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.