செய்திகள்
திவுலபிட்டிய விகாரையில் திருட்டு

Nov 2, 2024 - 03:35 PM -

0

திவுலபிட்டிய விகாரையில் திருட்டு

திவுலப்பிட்டி-ஹபுவலான விகாரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விகாரையில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

குறித்த இரு சந்தேக நபர்களும் இன்று (02) அதிகாலை வந்து விகாரையில் தங்கியிருந்த விஹாராதிபதியை கட்டி வைத்துவிட்டு பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சுமார் 5 இலட்சம் ரூபா திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05