Nov 4, 2024 - 08:26 PM -
0
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (03) கிளிநொச்சி பெரியகுளம், கட்டைக்காடு பகுதியில் நடைபெற்றது.
இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வசா விழா பாதையினை திறப்பதற்கு நீண்ட காலமாக முயற்சிகள் தம்மால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அப்பாதையினை திறப்பதற்கு பல்வேறு வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொண்டு அத்துடன் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடமும் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பாகவும் வீதிகள் தொடர்பாகவும் பேசப்பட்டதாகவும் இதனை அடுத்து தற்பொழுது பாதை மக்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டதை நினைத்து தான் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
--