Nov 5, 2024 - 11:50 AM -
0
உலகளவில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டம் வென்ற இவர் தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தார். பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தமிழில் ராவணன், எந்திரன், ஜீன்ஸ், பொன்னியின் செல்வன் என சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.
சமீபகாலாமாக ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாகவும் அதனால் விரைவில் இருவரும் விவாகரத்து பெறப்போகிறார்கள் என பல விதமான வதந்திகள் உலா வருகிறது.
இந்நிலையில், சங்கீத் குமார் என்ற நபர் அவர் ஐஸ்வர்யா ராயின் மகன் என்று கூறி பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயது இருக்கும் போது லண்டனில் `IVF-In Vitro Fertilization` மூலம் அவர் பிறந்ததாகவும் பின் ஐஸ்வர்யா ராயின் பெற்றோர் அவரை விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து வளர்த்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவரிடம் எந்த விதமான ஆதாரங்களும் இல்லை என்பதால் அவர் யார்? ஏன் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று விசாரித்ததில், அவருக்கு மனநிலை சரியில்லை என்பது தெரியவந்துள்ளது.