செய்திகள்
போதகர் ஜெரோமின் வருகைக்கு எதிர்ப்பு

Nov 5, 2024 - 05:34 PM -

0

போதகர் ஜெரோமின் வருகைக்கு எதிர்ப்பு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (05) நாவலப்பிட்டி மீப்பிட்டிய பிரதேசத்திற்கு வந்ததையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.


போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பை வௌிப்படுத்தியதன் காரணமாக இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டது.


மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான புனர்வாழ்வு நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் இடமொன்றுக்கு, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் வருகையைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.


நிலைமையைக் கட்டுப்படுத்த நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளும் வந்திருந்தனர்.


குழந்தைகளுக்கான புனர்வாழ்வு நிலையமொனறைக் கட்டித் தருவதாகக் கூறி, இந்த இடத்தில் மத வழிபாட்டுத் தலத்தைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


பின்னர், கிராம மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05