கிழக்கு
சடலமாக மீட்கப்பட்ட வைத்திய நிபுணரின் மனைவி!

Nov 5, 2024 - 06:19 PM -

0

சடலமாக மீட்கப்பட்ட வைத்திய நிபுணரின் மனைவி!

திருகோணமலை நகரில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் உள்ள குடியிருப்பில் பிரபல வைத்திய நிபுணரின் ஒருவரின் மனைவி கத்திக்குத்துக்குள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (05) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

திருகோணமலை, உவர்மலையில் உள்ள பிரபல வைத்திய நிபுணருக்கு சொந்தமான வைத்தியசாலையில் உள்ள அவரது வீட்டிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

மீட்கப்பட்ட சடலம் குறித்த வைத்தியசாலையின் உரிமையாளரான வைத்திய நிபுணரின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த வைத்தியரின் மனைவி இன்று அதிகாலை லண்டனிலிருந்து திருகோணமலை வந்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

இது தொடர்பில் குறித்த வைத்திய நிபுணரின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

சடலம் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05