Nov 7, 2024 - 11:37 AM -
0
பிக் பாஸ் 8 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் 6 புதிய போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், தற்போது 21 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று (06) எபிசோடில் சௌந்தர்யா, ஜெப்ரி, ஆனந்தி, உள்ளிட்ட சில போட்டியாளர்கள் கலர் நகை விளையாட்டை விளையாடி கொண்டு இருந்தனர்.
அப்போது பிங்க் நிறத்தை தொட வேண்டும் என்பதால் சௌந்தர்யா வேகமாக சென்று தீபக் சட்டையில் இருக்கும் பிங்க் நிற எழுத்துக்களை தொட்டுவிடுகிறார்.
இதனால் தீபக் கடும் கோபமாகி அவரை திட்டுகிறார். 'என் பர்மிஷன் இல்லாம எப்படி என்னை தொடுவ. உனக்கு manners இல்லையா. எனக்கு வலிக்குது' என திட்டி தீர்த்துவிட்டார்.
தீபக் இப்படி கூறிய நிலையில் அதிர்ச்சியடைந்த சௌந்தர்யா மன்னிப்பும் கேட்டுவிட்டார். அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.