கிழக்கு
எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை!

Nov 12, 2024 - 02:51 PM -

0

எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை!

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று (11) நள்ளிரவு முதல் நிறைவுபெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 218 தேர்தல் விதி முறை மீறல்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜி.ஜி.முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (12) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 449,686 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதுடன் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 17,003 பேரும் தகுதிபெற்று இருந்தனர்.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பிரதான வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி செயற்படும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05