செய்திகள்
இறுதி நேரத்தில் குறுக்கிட்ட மழை

Nov 13, 2024 - 07:46 PM -

0

இறுதி நேரத்தில் குறுக்கிட்ட மழை

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தற்போது மழை குறுக்கிட்டுள்ளது.

 

தம்புள்ளையில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

 

இதன்படி முதலில் தடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்ற போது போட்டியில் மழை குறுக்கிட்டது.

 

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பாடிய Kusal Mendis மற்றும் Avishka Fernando ஆகியோர் சதங்களை கடந்தனர்.

 

Kusal Mendis 143 ஓட்டங்களையும், Avishka Fernando 100 ஓட்டங்களையும் பெற்று ஒருநாள் போட்டியில் தமது 4ஆவது சதத்தினையும் பூர்த்தி செய்தனர்.

 

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Jacob Duffy 03 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

 

போட்டியில் மழை குறுக்கிட்டதால் நியூசிலாந்து அணிக்கு டக்வத் லூயிஸ் முறைப்படி வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படலாம்.

Comments
0

MOST READ
01
02
03
04
05