Nov 14, 2024 - 05:52 PM -
0
தேர்தல் தொகுதியில் போட்டியிடும் யசோதினி இன்று (14) தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் தனது பூர்வீக கிராமமான வவுனியா கோவில், புளியங்குளம் வேலங்குளம் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தி இருந்தார்.
வாக்கைச் செலுத்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நான் பிறந்த கிராமத்தில் எனக்கு நான் வாக்களித்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. இந்த போர் முடிந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு எங்களுடைய மக்கள் மிகவும் பொருளாதார அரசியல் ரீதியாக ஏனைய அடிப்படை வசதிகள் ரீதியாக மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கின்றார்கள்.
அந்த வகையில் எங்களுடைய மக்கள் எதிர்பார்ப்பது ஒரு மாற்றம் ஒரு எழுச்சி ஒரு முன்னேற்றம் என்பதை தான் எதிர்பார்க்கின்றார்கள்.
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் எங்களுடைய மக்கள் வாக்குகளை அளித்து எங்களுடைய இருப்புகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
--