Nov 14, 2024 - 08:07 PM -
0
அம்பாறை மாவட்டத்தில் இன்று (14) பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் மிகவும் சுமூகமான முறையில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் திகாமடுல்ல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சிந்தக அபேவிக்ரம ஊடக சந்திப்பின் போது பின்வருமாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில், அம்பாறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் சுமார் 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன் வாக்காளர்களின் எண்ணிக்கை 555,432 ஆகும். மற்றும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 07 ஆகும். மொத்தமாக 64 அரசியல் கட்சி உட்பட சுயேட்சைக்குழுக்கள் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக போட்டியிடுகின்றன என தெரிவித்தார்.
--