செய்திகள்
விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் படுகொலை!

Nov 19, 2024 - 12:21 PM -

0

விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் படுகொலை!

விற்பனை நிலையம் ஒன்றுக்கு வந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி அதன் உரிமையாளரைக் கொலை செய்துள்ளார்.

 

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவதகல பிரதேசத்தில் நேற்று (18) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

 

எல்பிட்டிய மேல் நவதகல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

 

பொலிசார் நடத்திய விசாரணையில் விற்பனை நிலையத்திற்கு  குடிபோதையில் வந்த நபரே இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது.

 

சந்தேக நபரும் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

சந்தேகநபர் நவதகல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவராவார்.

 

சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 

எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05