Nov 19, 2024 - 01:06 PM -
0
இலங்கை தமிழரசு கட்சியினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனம் மீள பெறப்பட வேண்டும். அந்த தேசியபட்டியல் பெண் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும். தற்போதைய புதிய அரசாங்கத்தில் பல்வேறு துறைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்விடயத்தை சகலரும் அறிவீர்கள். இது தவிர புதிய அமைச்சரவையிலும் பெண்களுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்று எமது தமிழரசுக் கட்சியில் பெண்களுக்கான உரிய இடம் வழங்கப்படவில்லை என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கடந்த 2024 ஆண்டு பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
அம்பாறை, காரைதீவு பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழரசு கட்சியினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனம் மீள பெறப்பட வேண்டும். அந்த தேசியபட்டியல் பெண் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும். தற்போதைய புதிய அரசாங்கத்தில் பல்வேறு துறைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்விடயத்தை சகலரும் அறிவீர்கள். இது தவிர புதிய அமைச்சரவையிலும் பெண்களுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்று எமது தமிழரசுக் கட்சியில் பெண்களுக்கான உரிய இடம் வழங்கப்படவில்லை.
எனவே ஒரு பெண்ணுக்காக இந்த தேசிய பட்டியல் வழங்க வேண்டும் என்பதே எனதும் மக்களதும் நிலைப்பாடாகும். கிழக்கு மக்களை வடக்கு தலைமைகள் அடகு வைத்து பல ஆண்டுகளாக ஆண்டு வருகிறார்கள் என்ற பல குற்றச்சாட்டுகளை இன்று ஒட்டுக் குழுக்கள் ஏனைய தரப்பினர்கள் முன்வைத்து அவர்களது பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து வந்தார்கள். அதேபோன்று நீங்கள் தொடர்ச்சியாக வடபகுதிக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக் கொண்டிருப்பதானது மிகவும் ஒரு பிழையான ஒரு செயலாக நான் கருதுகின்றேன்.
எங்களுடைய கட்சியை பலப்படுத்த வேண்டுமாயின் கட்சியினுடைய தேசியப் பட்டியல் ஆசனம் ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டும். அது மாத்திரமன்றி தலைவர் மற்றும் செயலாளருக்கு இவ்வாறான தேசிய பட்டியல் ஆசனங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
--