செய்திகள்
வாகன விபத்தில் ஒருவர் பலி

Nov 21, 2024 - 03:15 PM -

0

வாகன விபத்தில் ஒருவர் பலி

பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னல தங்கொட்டுவ வீதியின் சந்தலங்காவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயரிழந்தார்.


தங்கொட்டுவவில் இருந்து பன்னல நோக்கி பயணித்த லொறியொன்று வீதியோரத்தில் வீழ்ந்து கிடந்த நபரொருவர் மீது மோதிச் சென்றதாக பொலிஸர் தெரிவித்தனர்.


சம்பவத்தில் காயமடைந்த நபர் சந்தலங்காவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்தார்.


சம்பவத்தில் உயிரிழந்தவர் 70 வயதுடைய சிங்கக்குளிய, யோகியான பிரதேசத்தைச் ​சேர்ந்தவராவார்.


சடலம் தற்போது மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05