கிழக்கு
ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

Nov 22, 2024 - 03:08 PM -

0

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

ஐஸ் போதைப் பொருட்களை நீண்ட காலமாக சிறு பொதி செய்து வியாபாரம் செய்து வந்த இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

 

நேற்று (21) இரவு கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

 

இதன் போது கல்முனைக்குடி 9 பிரிவு மதிரிஸா வீதியில் வசிக்கும் 26 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தை 970 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடனும் கல்முனைக்குடி 2 ஆம் பிரிவு கிறீன் பீல்ட் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சந்தேக நபர்  870 மில்லி கிராம்   போதைப் பொருளுடனும் கைதாகி உள்ளனர்.

 

கைதான 2 சந்தேக நபர்களையும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

மேலும்  இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய  முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 

அத்துடன் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ஐஸ் போதைப்பொருள்கள் அதிகளவாக  மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05