சினிமா
மாணவிக்கு பாலியல் தொல்லை - நடிகர் கைது!

Nov 22, 2024 - 05:29 PM -

0

மாணவிக்கு பாலியல் தொல்லை - நடிகர் கைது!

கேரளாவை சேர்ந்தவர் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர் (வயது 55). மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

 

இந்த நிலையில் நடிகர் அப்துல் நாசர், தான் பணிபுரியக்கூடிய பெண்கள் மேல்நிலைப்பாடசாலையில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் வண்டூர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

 

அதன்பேரில் விசாரணை நடத்திய பொலிஸார் அப்துல் நாசர் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர். மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05