Nov 23, 2024 - 10:24 AM -
0
இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கிண்ண தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று (22) தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதல் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களில் சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ஓட்டங்களையும், பண்ட் 37 ஓட்டங்களையும் எடுத்தனர். அவுஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 67 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.
முன்னதாக ரிஷப் பண்ட் இந்த இன்னிங்சில் பெற்ற ஒட்டங்களையும் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய மண்ணில் இதுவரை 661 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலிய மண்ணில் அதிக ஓட்டங்களை பெற்ற வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.