Header Logo

செய்திகள்
மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது

Nov 24, 2024 - 02:21 PM -

0

மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது

நாட்டின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் ஒருவரை கஹதுட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கஹதுட்டுவ, மீரிகம, கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களில் இருந்து 10 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான மூன்று மோட்டார் சைக்கிள்களை சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்டதாக தெரிவிக்கப்படும் 3 கையடக்கத் தொலைபேசிகளையும் சந்தேகநபரிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், திருடிய மோட்டார் சைக்கிள்களை ஆடிஅம்பலம பகுதியில் இரண்டு இடங்களில் ஒன்றரை இலட்சம் ரூபாவிற்கு அடகு வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


இதன்படி, அடகு வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பொலிஸ் காவலில் எடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


மோட்டார் சைக்கிள்களை அடகு வைத்து பெறப்பட்ட பணத்தை சந்தேக நபர், திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுக்காக பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் படுவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Comments
0

MOST READ

காணொளி
ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

title