கிழக்கு
வௌ்ளத்தால் வயலுக்குள் சிக்கியுள்ள விவசாயிகள்!

Nov 26, 2024 - 06:40 PM -

0

வௌ்ளத்தால் வயலுக்குள் சிக்கியுள்ள விவசாயிகள்!

மட்டக்களப்பு - புல்லுமலை, தம்பட்டி, மற்றும் மாவடிஓடை வண்ணாத்தி ஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் சிக்குண்டுள்ளார்கள் என மாவட்ட விவசாய அமைப்பின்தலைவர் ரமேஸ் தெரிவித்தார்.

 

குறித்த பகுதியிலுள்ள வயல்களில் வேளாண்மை காவலுக்கு சென்ற மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக புல்லுமலை தம்பட்டி வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும் மாவடி ஓடை வண்ணாத்தி ஆறு வயல் பிரதேசத்தில் 4 பேர் உட்பட 7 விவசாயிகள்  சென்றிருந்தனர்.

 

இந்த நிலையில் தொடர் கடும் மழை காரணமாக அந்த பகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் வெள்ளத்தில் முழ்கியதுடன் வீதிகள் பல மூழ்கியதையடுத்து அந்த விவசாயிகள் தமது வாடிகளில் இருந்து வீடுகளுக்கு வெளியேறமுடியாமல் சிக்குண்டுள்ளனர்.

 

இவர்களை மீட்பதற்காக கடற்படையினர் மற்றும் விமானபடையினரின் உதவியை கேட்டுள்ளதாகவும் வெள்ள நீர் அதிகமாக பாய்ந்தோடுவதால் படகில் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மேகம் இருள் சூழ்ந்து காத்து வீசுவாதால் விமானபடையின் ஹெலிகாப்டர் பயணிக்கமுடியாத காலநிலை ஏற்பட்டுள்ளதாக விமானபடையினர் தெரிவித்துள்ளனர்.

 

இருந்தபோதும் அங்கு சிக்குண்டர்களுடனான தொடர்பு தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் இவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவாதக அவர் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05