Header Logo

செய்திகள்
இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

Nov 26, 2024 - 07:43 PM -

0

இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் மறுசீரமைப்பு தற்போதுள்ள பத்திரங்களுக்கு புதிய பத்திரங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.


அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை இலங்கை அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ளது.


நேற்றைய நிலவரப்படி, நிலுவையில் உள்ள பத்திரங்களின் மதிப்பு 12.55 பில்லியன் டொலராக உள்ளது, அதன்படி பத்திரங்கள் மறுசீரமைக்கப்படும்.


இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


ஏற்கனவே உள்ள பத்திரங்களை வைத்திருப்பவர்கள் புதிய பத்திரங்களுடன் தங்கள் பத்திரங்களை மாற்றிக்கொள்ள 3 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


அதன் இறுதித் திகதி டிசம்பர் 12 ஆகும்.


பத்திரப் பரிவர்த்தனை நடவடிக்கையில் விரைவில் இணையுமாறு சம்பந்தப்பட்ட பத்திர வைத்திருப்பவர்களை இலங்கை கோரியுள்ளது.


புதிய கருவிகளின் பிரத்தியேகங்கள் குறித்து இரண்டு ஆண்டுகளாக பத்திரப்பதிவுதாரர்களுடன் நல்லெண்ணத்துடன் கலந்துரையாடப்பட்டதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சகல தரப்பினரும் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் வகையில் இந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதே இதன் நோக்கமாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.


செப்டம்பர் 19, 2024 அன்று இரண்டு பத்திரதாரர்களுடன் கொள்கை ரீதியான ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஒரு பக்கம் சர்வதேச பத்திரங்களை வைத்திருக்கும் சர்வதேச முதலீட்டாளர்களைக் கொண்டுள்ளது, மற்றொரு பக்கம் உள்நாட்டு நிதி நிறுவனங்களைக் கொண்டுள்ளது.


நிலுவையில் உள்ள பத்திரங்களில் 50%க்கும் அதிகமானவை மேற்படி இரு தரப்பினரிடமும் காணப்படுகின்றன.


மேலும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு புதிய முறைகள் இலங்கையில் நடைமுறையில் உள்ள IMF அளவுருக்களுடன் இணக்கமாக இருப்பதாக அங்கீகரித்துள்ளன.


பத்திர மறுசீரமைப்பு வெற்றிகரமாக முடிவடைந்தமை சர்வதேச இறையாண்மைக் கடனின் நிலைத்தன்மையை உறுதி செய்வதோடு நாட்டின் பொருளாதாரத்தின் மீட்சியை விரைவுபடுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனடிப்படையில், இலங்கையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் பங்குகொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனியார் துறை கடன் வழங்குனர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


மிகவும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பின்னணியை உருவாக்குவதாகவும் குறிப்பிட்டார்.


இதற்கிடையில், இலங்கையின் நிலுவையில் உள்ள சர்வதேச இறையாண்மை பத்திரங்களில் சுமார் 12% சொந்தமாக உள்ள உள்ளூர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பு, இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தாங்களும் உடன்படுவதாக குறிப்பிடுகிறது.

 

 

Comments
0

MOST READ

காணொளி
நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

title