வடக்கு
சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு!

Nov 28, 2024 - 07:30 PM -

0

சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு!

நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள்  மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று (28) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் இருந்து 3 நோயாளரும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு தரைவழியாக கொண்டுசென்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05