செய்திகள்
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

Nov 30, 2024 - 10:59 AM -

0

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

அம்பன்பொல-நெகுன்னேவ பிரதேசத்தில் உள்ளாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 

அம்பன்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கைதான நபர் 63 வயதுடைய அம்பன்பொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05