செய்திகள்
400 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர்கள்

Dec 2, 2024 - 01:03 PM -

0

400 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர்கள்

சமீபத்தில் இந்திய கடற்பரப்பில் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளும், அதில் பயணித்த சந்தேக நபர்களும் இன்று (02) கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.


இந்த நடவடிக்கையில் இலங்கை கடற்படையின் கஜபாகு கப்பல் இணைந்துள்ளது.


இந்திய கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையே நடந்த உளவுத்துறை பரிமாற்றத்தை தொடர்ந்து குறித்த இரண்டு கப்பல்களையும் இந்திய கடற்படை பொறுப்பேற்றது.


அதில் ஒரு படகில் சுமார் 400 கிலோ ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும், மற்றைய கப்பல் உதவிக்காக சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.


கடந்த 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நீண்டநாள் மீன்பிடிப் படகுகளுடன் சந்தேகநபர்களை இந்திய கடற்படையினர் கைது செய்திருந்தனர்.


ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு, பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் சந்தேக நபர்களை இந்திய கடற்படையினர் கடந்த 29ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பலான கஜபாகுவிடம் ஒப்படைத்தனர்.


இந்நிலையில், சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் ஒப்படைக்க கடற்படையின் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

Comments
0

MOST READ