கிழக்கு
லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

Dec 5, 2024 - 04:52 PM -

0

லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

வாழைச்சேனை பொலன்னறுவை வீதியில் உள்ள மியான்குளம் பகுதியில் லொறி ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளதுடன் லொறி சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

புனானை ஓமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய கனகசூரியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

சம்பவதினமான நேற்று இரவு 8.00 மணிக்கு பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறியும் வாழைச்சேனையில் இருந்து புனானை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் மியான்குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த 65 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.​

 

இந்த விபத்தில் புனானை ஓமனியாமடு பிரதேச்தைச்சேர்ந்த எம.வினோதன், கணவதிப்பிள்ளை யோஹனா மற்றும் ரிதிதென்னையை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான உசனார் மஜிதீன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்​ ஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த லொறிசாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதில் கைது செய்த சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05