Header Logo
Mogo Academy

ஏனையவை
20 வருட நிறைவை கொண்டாடும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம்!

Dec 5, 2024 - 05:13 PM -

0

20 வருட நிறைவை கொண்டாடும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம்!
Mobitel inner

ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஆங்கில மொழித் திறன்கள், தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்புகள் சம்பந்தமாக 1,300 இற்கும் அதிகமான இலங்கை இளைஞர்களை வலுவூட்டியுள்ள மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியொன்றான ஆங்கில அணுகல் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் (English Access Scholarship Program) 20 ஆவது ஆண்டு நிறைவை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த வருடம் பெருமையுடன் சிறப்பிக்கிறது.

 

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் உலகளாவிய ரீதியில் 2004 ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்த ஆங்கில அணுகல் நிகழ்ச்சித்திட்டமானது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில மொழி திறன்களில் வலுவான அடித்தளமொன்றை வழங்குகிறது.

 

அதன் இரண்டு வருடம் முழுவதுமான இலவச 360 மணிநேர பாடத்திட்டத்தின் ஊடாக இலங்கை இளைஞர்கள் தலைமைத்துவ பயிற்சி, தொழில்சார் அபிவிருத்தி வாய்ப்புகள் மற்றும் அமெரிக்க கலாசார மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கான வெளிப்பாடுகளை பெற்றுக்கொள்கின்றனர்.

 

இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்ட அனுபவங்காளனது சிறந்த கல்வி மற்றும் தொழில்சார் வாய்ப்புகளுக்கான கதவுகளை திறப்பதுடன், எதிர்காலத்தில் அமெரிக்காவிலான பரிமாற்ற மற்றும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு போட்டியிடுவதற்கும் மாணவர்களை தயார் செய்கிறது.

 

இலங்கையில் ஆங்கில அணுகல் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதானது, கல்வியின் மூலம் இளைஞர்களை வலுவூட்டுவதிலான எமது நீடித்த உறுதிப்பாட்டுக்கு சான்று பகிர்வதாக அமைந்துள்ளது, என்று அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சித்திட்டமானது அத்தியவசியமான ஆங்கில மொழி திறன்களை வழங்குவதுடன் மட்டுமல்லாது, தலைமைத்துவம், தொழில்சார் அபிவிருத்தி மற்றும் கலசாரங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஊக்குவிக்கிறது. 

 

சமூகங்களுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலமும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியும் நாம் பிரகாசமானதும் அனைவரையும் மேலும் உள்வாங்கிய எதிர்காலமொன்றிலும் நாம் முதலீடு செய்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்டமானது வெறுமனே மாணவர்களின் வாழ்க்கையை மாற்றுவது மட்டுமல்லாது, அது இலங்கயில் ஆங்கில மொழி கற்பித்தலை வலுப்படுத்துவதுடன், மாணவர்களை உலகளாவிய அணுகல் வலையமைப்பிற்கும் மற்றும் இந்த நாட்டின் அனைத்து மூலைகளில் இருந்துமான சகாக்களுடனும் இணைக்கிறது.

 

இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆசிரியர்கள் உயர்தரத்திலான பயிற்சிகளை பெறுவதுடன், தேசிய மற்றும் பிராந்திய மாநாடுகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகளுடன் உலகளாவிய பயிற்சி சமூகமொன்றுடனும் இணைந்து கொள்கின்றனர். இந்த வருடத்தின் ஆரம்பத்தில், 34 இலங்கை கல்வியலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் முன்னாள் மாணவ சமூகத்தினர்
நேபாளத்தின் காத்மண்டுவில் நடைபெற்ற 20ஆவது ஆண்டு நிறைறையொட்டிய பிராந்திய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டனர்.

 

நாம் எவ்வாறு கல்வி ரீதியான வாய்ப்புகளை விஸ்தரிக்கிறோம் மற்றும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் எவ்வாறு வலுவான உறவுகளை கட்டியெழுப்புகிறோம் என்பதில் இந்த ஆங்கில அணுகல் நிகழ்ச்சித்திட்டமானது முக்கியமான அங்கமொன்றாக அமைந்திருக்கிறது என்று அமெரிக்க தூதரகத்தின் பொது அலுவல்கள் அதிகாரி ஹய்டி ஹட்டன்பேக் தெரிவித்தார்.

 

மோதல்களுக்கு பின்னர் மீட்சி அடைந்துவரும் நாடொன்றில், இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்டமானது ஆங்கிலம் கற்பித்தலுக்கு மேலதிகமாக பல விடயங்களை செய்துள்ளது. அது வேறுபட்ட பின்னணிகளிலிருந்தான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றுபடுத்துவதுடன், அவர்களை உலகளாவிய வலையமைப்பொன்றுக்கும் இணைக்கிறது. அதுமட்டுமல்லாது, சமூகங்கள் முழுவதும் புரிந்துணர்வு மற்றும் கூட்டிணைவை ஊக்குவிக்கும் அதேவேளை, தமது கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கான முயற்சியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் திறன்களையும் நம்பிக்கையும் இந்த நிகழ்ச்சித்திட்டம் வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

ஆங்கிலத்தை இணைப்பு மொழியொன்றாக பயன்படுத்தி வேறுபட்ட பின்னணிகளில் இருந்தான மாணவர்களை இணைப்பதை அணுகல் நிகழ்ச்சித்திட்ட வழங்குனர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பிணைப்புகளானது, வாழ்நாள் முழுவதுமான இணைப்புகளை
உருவாக்கி இன மற்றும் மத வேறுபாடுகளை கடந்து செல்ல வழிவகுக்கின்றன.

 

பலதரப்பட்ட பின்னணிகளிலிருந்தான மக்களுடன் செயல்படுவதற்கான நம்பிக்கையையும் மற்றும் தெளிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் உரையாற்றுவதற்கும் விடயங்களை முன்வைப்பதற்குமான திறன்களையும் எனக்கு வழங்கி, இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்டமானது நான் மற்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்ளும் விதத்தை மாற்றியது என்று யாழ்ப்பாணத் சேர்ந்த அணுகல் நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னாள் மாணவியான மாதங்கி தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

இந்த 20 ஆவது ஆண்டு நிறைவு என்ற மைல்க்கல்லை சிறப்பிக்கும் நிமித்தம் கண்டியில் நடைபெறும் நான்கு நாட்கள் முகாமானது யாழ்ப்பாணம், காலி, குருநாகல், திருகோணமலை, மற்றும் நுவரெலியாவில் இருந்து அணுகல் நிகழ்ச்சித்திட்டத்தில் தற்போது பங்குகொள்ளும் 150 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றிணைக்கவுள்ளது.

 

ஜோர்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தின் அணுசரனையிலான ஆங்கில மொழி புலமையாளர்கள் தலைமையிலான ஊடாடல் அமர்வுகள், ஒரு சமூக சேவை திட்டம் மற்றும் மாணவர்களின் தனித்துவமான அனுபவங்களை வெளிப்படுத்தும் கலாச்சார இரவு நிகழ்ச்சி என்பனவும் இந்த நிகழ்வில் இடம்பெறவுள்ளன.

 

ஏனைய பேச்சாளர்களுடன் தூதுவர் ஜுலீ சங்கும் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்வில் கலந்துகொள்வார். இலங்கையின் மேல் மாகாணத்தைச் சேர்ந்த வெறும் 56 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்டமானது, தற்போது 185 பேர் கொண்ட இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மிகப்பெரிய முன்னாள் மாணவ சமூகத்தின் இருப்பிடமான கண்டி உட்பட நாடு முழுவதும் 50 இற்கும் மேற்பட்ட இடங்களைச் சேர்ந்த பழைய மாணவர்களைக் கொண்டுள்ளது.

 

வரவிருக்கும் 2025 - 2027 சுழற்சிக்காக, இந்த நிகழ்ச்சித்திட்டமானது யாழ்ப்பாணம், நுவரெலியா, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் இருந்தான பாடசாலைகளை சேர்ந்த 150 புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும்.

 

இலங்கையிலும் அதற்கு அப்பாலும் காலாசாரங்களுக்கு இடையிலான தொடர்புகளையும் அதேநேரம், ஆங்கில மொழி மற்றும் தலைமைத்துவ திறன்களையும் மேம்படுத்தும் இந்த பாரம்பரியத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து இந்த இலவச நிகழ்ச்சித் திட்டத்தை வழங்குவதில் அமெரிக்க தூதரகமும் மற்றும் அதனது உள்ளூர் அணுகல் நிகழ்ச்சித்திட்ட பங்காண்மையாளர்களும் பெருமையடைகின்றனர்.

 

இலங்கையில் அமெரிக்காவின் முன்னெடுப்புகள் பற்றி மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://lk.usembassy.gov/ என்ற இணையத்தள முகவரிக்கும் @USEmbassySL என்ற சமூக ஊடக தளத்திற்கும் பிரவேசிக்கவும்.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara