செய்திகள்
படகு கவிழ்ந்ததில் மாணவன் உயிரிழப்பு

Dec 7, 2024 - 07:31 PM -

0

படகு கவிழ்ந்ததில் மாணவன் உயிரிழப்பு

செல்லக்கதிர்காமம் பகுதியில் அக்கர விஸ்ஸ வாவியில் 5 மாணவர்கள் பயணித்த கட்டுமர படகொன்று கவிழ்ந்துள்ளது.


விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர் செல்லக் கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய பிரமோத் என்ற மாணவராவார்.


இந்த விபத்து இன்று (07) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


இம்முறை உயர்தரத்தில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் இந்த படகில் பயணித்த நிலையில், படகு கவிழ்ந்ததை தொடர்ந்து கிராம மக்கள் உடனடியாக விரைந்து அவர்களை காப்பாற்றியுள்ளனர்.


உயிரிழந்த மாணவனின் சடலம் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05