செய்திகள்
மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி

Dec 12, 2024 - 07:09 AM -

0

மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி

கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மடுவ பிரதேசத்தில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்தில் 13 வயதுடைய ரங்வல, கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

 

சம்பவ தினத்தன்று சிறுவன், தந்தை மற்றும் பிரிதொரு நபருடன் மரம் ஒன்றை வெட்டிக்கொட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மரக் கிளை ஒன்று சிறுவன் மீது வீழ்ந்ததில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


பிரேத பரிசோதனைக்காக சடலம் கொடகவெல மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05