இந்தியா
வினாத்தாள் கசிவு - 11ஆம் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

Mar 23, 2025 - 06:53 AM -

0

வினாத்தாள் கசிவு - 11ஆம் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

இந்தியாவின் அசாமில் வினாத்தாள் கசிவு காரணமாக மார்ச் 24 முதல் 29ஆம் திகதி வரை நடக்கவிருந்த 11ஆம் தர பொதுப் பரீட்சைகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 6ஆம் திகதி முதல் அசாமில் தொடங்கிய 11ஆம் தர பரீட்சை மார்ச் 29 அன்று முடிவடைய இருந்தது. 

இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் கணித பாடத்தின் வினாத்தாள் கசிவு முறைப்பாடுகள் எழுந்தது. இதனையடுத்து, மார்ச் 24- 29 வரை நடைபெற இருந்த அனைத்து 11 ஆம் தர பரீட்சைகளையும் இரத்து செய்வதாக அசாம் பாடசாலைக் கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெகு அறிவித்தார். 

முன்னதாக அசாமின் பார்பெட்டா மாவட்டத்தில் மார்ச் 20 அன்று நடைபெறவிருந்த 9 ஆம் தர ஆங்கில பரீட்சை வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்தால் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05