Dec 15, 2024 - 07:12 AM -
0
வௌிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை ஹக்மன பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபருக்கு எதிராக ஹக்மனை பொலிஸ் நிலையத்தில் 9 முறைப்பாடுகள் பதிவாகி உள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் கிண்ணியா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர் 36 வயதுடைய புஹூல்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபரால் 43 இலட்சத்திற்கும் அதிக தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹக்மன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.