செய்திகள்
இரண்டு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Dec 15, 2024 - 12:05 PM -

0

இரண்டு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

பலத்த மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ஒரு வான் கதவு தலா இரண்டு அடியும், மற்ற இரண்டு வான்கதவுகள் தலா மூன்று அடியும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

வினாடிக்கு 3775 கன அடி நீர் கலா ஓயாவிற்கு விடுவிக்கப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, அங்கம நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

 

தலா ஒரு அடி திறக்கப்பட்டுள்ள இந்த வான் கதவுகள் மூலம் வினாடிக்கு 600 கன அடி நீர் கலா ஓயாவிற்கு விடுவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05