செய்திகள்
ஜனாதிபதிக்கு விருந்தளித்த இந்திய ஜனாதிபதி!

Dec 16, 2024 - 10:53 PM -

0

ஜனாதிபதிக்கு விருந்தளித்த இந்திய ஜனாதிபதி!

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.

 

இந்த சந்திப்பின் போது, ​​இந்திய-இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாறப்பட்டது.

 

சிநேகபூர்வ சந்திப்பின் பின்னர் இந்திய ஜனாதிபதி   திரௌபதி முர்மு , ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இராப்போசன விருந்து வழங்கினார்.

 

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும்  இந்த சந்திப்பில் இணைந்து  கொண்டனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05