Dec 17, 2024 - 11:17 AM -
0
இமாலயப் பிரகடனத்தை சிவில் சமூகத்திடம் கொண்டு செல்லும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாநாடு நேற்று (16) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த மாநாட்டில் இமால பிரகடனத்தில் கையொப்பமிட்ட வண.சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் பிரதம சங்கநாயக தேரர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம், வண கலுபஹன பியரதன நாயக தேரர், வண. நாரம்பனாவே தம்மாலோக தேரர், பிரதம சங்கநாயக தேரர் மத்திய மாகாணம், வண. வலதர சோபித நாயக தேரர், வேலுப்பிள்ளை குகனேந்திரன் உலகத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் ஆகியோர் கலந்து கொண்டு இமாலய பிரகடனம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம் தெளிவு படுத்தி பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டனர்.
--

