Dec 20, 2024 - 02:58 PM -
0
வலிமையான உலக தலைவர்களில் ஒருவராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கருதப்படுகிறார். இந்த வருடம் முடிவுக்கு வர இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் வழக்கப்படி வருடாந்திர ஆண்டு இறுதி ஊடகவியலாளர் சந்திப்பில் விளாடிமிர் புடின் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அப்போது வாழும் அல்லது உயிரிழந்த உலக தலைவர்கள் யாரோடு நீங்கள் ஒரு கோப்பை தேநீர் அருந்த விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த புடின், முன்னாள் ஜேர்மன் ஜனாதிபதி ஹெல்முட் கோல், முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகிய மறைந்த தலைவர்களுடன் தேநீர் அருந்த விரும்புவதாக புடின் தெரிவித்தார்.
மேலும் முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி ஜாக் சிராக்கிடம் இருந்து தான் பல விடயங்களைக் கற்றுக்கொண்டதாக புடின் அவரை நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய புடின் ஆசியாவில், சீனா மற்றும் இந்தியாவுடன் நட்புறவு கொண்டுள்ளதாக தெரிவித்தார் . இந்திய பிரதமருடன் எனக்கு மிகவும் அன்பான உறவு உள்ளது என்றும் புடின் குறிப்பிட்டார்.