உலகம்
ரஷ்யாவில் அரிசி ஏற்றுமதித் தடை மேலும் 6 மாதங்கள் நீடிப்பு

Dec 24, 2024 - 09:13 PM -

0

ரஷ்யாவில் அரிசி ஏற்றுமதித் தடை மேலும் 6 மாதங்கள் நீடிப்பு

கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள பெடோரோவ்ஸ்கி நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் ரஷ்யாவின் முதன்மை அரிசி உற்பத்தி செய்யும் பகுதியான கிராஸ்னோடர் பகுதியில் உள்ள நெல் வயல்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகியவற்றின் காரணமாக, அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.


உள்நாட்டு சந்தைக்கு நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்காக 2024 டிசம்பர் 31 வரை அரிசி ஏற்றுமதிக்கான தடையை அந்நாட்டு அரசாங்கம் நீடித்திருந்தது.


இந்நிலையில், நெல் விதைகளைத் தவிர, அரிசி மற்றும் அரிசிப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது 2025 ஜூன் 30 வரை நீடித்து ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது.


இதேவேளை, அரிசி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் யூரேசியன் பொருளாதார ஒன்றியம், அப்காசியா, தெற்கு ஒசேட்டியா, அத்துடன் மனிதாபிமான உதவிகள் மற்றும் சர்வதேச போக்குவரத்துக்கான ஏற்றுமதி ஆகியவற்றிற்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05