வடக்கு
வைத்தியர்களினால் வெற்றிகரமாக அகற்றப்பட்ட கூரிய தடி

Dec 26, 2024 - 11:31 AM -

0

வைத்தியர்களினால் வெற்றிகரமாக அகற்றப்பட்ட கூரிய தடி

வவுனியா பொது வைத்தியசாலையில் கழுத்தில் கூரியதடி ஒன்று குற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திர சிகிச்சையினால் கூரிய தடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டார்.

 

குறித்த சத்திர சிகிச்சை நேற்று (24) இடம்பெற்றது.

 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

 

கழுத்தில் கூரியதடி ஒன்று குற்றி மறுபக்கம் வந்த முதியவர் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் வவுனியா வைத்தியசாலையில் செவ்வாய்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

குறித்த முதியவருக்கு வைத்தியசாலையில் உரிய நேரத்தில் விரைவாக முன்னெடுக்கப்பட்ட சத்திர சிகிச்சை மூலம் அவரது கழுத்தில் குற்றிய தடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டார்.

 

இவ் வெற்றிகரமான சத்திர சிகிச்சையினை உணர்வழியியல் மருத்துவ நிபுணர் நாகேஸ்வரன் தலைமையிலான மயக்கமருந்து அணியினருடன் இணைந்துசத்திர சிகிச்சை நிபுணர் ரஜீவ் நிர்மலசிங்கம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05