Dec 28, 2024 - 10:55 PM -
0
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகளை யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர் சம்மேளன அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் உள்ளிட்ட சம்மேளன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
--