செய்திகள்
தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

Dec 29, 2024 - 08:12 AM -

0

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட  நால்வர் கைது

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கர் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ நகரில் பிரதேசத்தில் பொலன்னறுவை வலய குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 69 வயதுக்கு இடைப்பட்ட பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைதான சந்தேகநபர்கள் பொலன்னறுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05