செய்திகள்
மின்சாரம் தாக்கி மூவர் பலி

Dec 29, 2024 - 10:38 PM -

0

மின்சாரம் தாக்கி மூவர் பலி

புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் இன்று (29) மாலை மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில்  பலஞ்சியின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனை தூக்கிச் சென்ற 4 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

 

இருப்பினும், அவர்களில் ஒருவர் தூக்கி விசப்பட்ட நிலையில், உயிர் பிழைத்துள்ளார்.

 

எனினும் ஏனைய மூவரும் உயிரிழந்தனர்.

 

உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05