Dec 31, 2024 - 07:13 AM -
0
மலையாள சினிமாவில் ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் சாய் பல்லவி. இப்படத்தில் இவர் மலர் டீச்சராக நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகிறது.இப்படத்தின் வெற்றின் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
இவர் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் இவருடைய நடிப்பில் வெளிவந்த “பாடி பாடி லெச்சே மனசு” படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது.
படத்தின் மொத்த வசூல் 10 கோடியை கூட தாண்டவில்லை. படத்தின் தோல்வியால் தயாரிப்பாளரிடம் தனக்கு வரவேண்டிய மீதி பணத்தை வேண்டாம் என மறுத்துள்ளார்.முன்பணத்தை தவிர்த்து மீதி உள்ள 40 லட்சம் பணத்தை அவர் வாங்க வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
சினிமாவில் பல நடிகைகள் படம் வெளியானவுடன் தனக்கும் படத்திற்கும் சம்மந்தம் இல்லாத போல் இருக்கும் நிலையில்,சாய் பல்லவியின் இந்த நற்செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.