Dec 31, 2024 - 09:28 PM -
0
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.
இதேவேளை, பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் எவ்விதமான மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் சிபெட்கோவின் எரிபொருள் திருத்தத்திற்கு அமைய செயற்படுவதாக அறிவித்துள்ளன.