Jan 3, 2025 - 07:05 AM -
0
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா - அவுஸ்திரேலியா இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டனாக பும்ரா செயல்படுகிறார். ரோகித் சர்மாவுக்கு பதிலாக அணியில் சுப்மன் கில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
அணி தலைவராக இருந்த ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளார்.
ஏற்கனவே இந்தப் போட்டியில் ரோகித் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.