கிழக்கு
ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் கைது!

Jan 3, 2025 - 11:33 AM -

0

ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் கைது!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று (02) இரவு சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞனை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் கைதான சந்தேக நபரிடமிருந்து 1,900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தது.

 

மேலும் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதேவேளை குறித்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸார் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05