செய்திகள்
கடந்த 5 வருடங்களில் விபத்தால் பறிபோன மனித உயிர்கள்

Jan 5, 2025 - 07:51 PM -

0

கடந்த 5 வருடங்களில் விபத்தால் பறிபோன மனித உயிர்கள்

கடந்த 5 வருடங்களில் வீதி விபத்துக்கள் காரணமாக நாட்டில் 12,140  மனித உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

2020, 2024, 2022, 2023, 2024 ஆம் ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற விபத்துக்கள் தொடர்பில் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பணிப்பாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.ஏ.கே.ஏ. இந்திக ஹபுகொடவின் மேற்பார்வையில் இடம்பெற்ற கணக்கெடுப்பில் இந்த தகவல் வௌியாகியுள்ளது.

 

அதன்படி, 2020 ஆம் ஆண்டில் 2,363 பேரும், 2021ஆம் ஆண்டில் 2,557 பேரும், 2022ஆம் ஆண்டில் 2,540 பேரும், 2023ஆம் ஆண்டில் 2,321 பேரும், 2024ஆம் ஆண்டில் 2,359 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

இது தவிர, 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர்  30ஆம் திகதி வரை நடந்த பேருந்து விபத்துகள் தொடர்பான தகவல்களும் வௌியிடப்பட்டுள்ளன.

 

இதன்படி, கடந்த 11 மாதங்களில் 198  பேருந்து விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

 

அவற்றுள் 50 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்களும், 148 தனியார் பேருந்து விபத்துக்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05