Header Logo

பல்சுவை
இறுதி சடங்கு முடிந்து, தகனம் செய்யப்பட்ட நபர் உயிரோடு வந்ததால் பரபரப்பு!

Jan 5, 2025 - 10:00 PM -

0

இறுதி சடங்கு முடிந்து, தகனம் செய்யப்பட்ட நபர் உயிரோடு வந்ததால் பரபரப்பு!

தமிழகம் மயிலாடுதுறை அருகே ஆற்றில் மூழ்கி இறந்ததாக கருதப்பட்டு இறுதி சடங்கு செய்து தகனம் செய்யப்பட்டவர் உயிரோடு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி பகுதியில் கடந்த 22ஆம் திகதி அடையாளம் தெரியாத வகையில் ஆண் ஒருவர் காவிரி ஆற்றில் சடலமாக கிடந்துள்ளார்.

 

தகவல் அறிந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.

 

செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் உயிரிழந்தவரின் மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 

இறுதி காரியங்களுக்கு பிறகு உடலை குடும்பத்தினர் தகனம் செய்துள்ளனர்.

 

இந்நிலையில் இன்றைய தினம் வெளியூரிலிரந்து மருதூர் கிராமத்திற்கு உயிரிழந்ததாக கூறப்பட்ட செல்வராஜ் என்ற நபர் வந்துள்ளார்.

 

செல்வராஜ் உயிரோடு வந்து நின்றதை கண்ட கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அப்போதுதான் செல்வராஜ் என்று கருதி அடையாளம் தெரியாத உடலை தகனம் செய்தது தெரியவந்தது.

 

இதுபற்றி செல்வராஜ் கூறுகையில், “என் மனைவி சாந்தி மகன் மற்றும் மகள்கள், மாந்தை கிராமத்தில் தற்போது வசித்துவருகின்றனர். 

 

நான் எனது சொந்த ஊரான மருதூர் பகுதிக்கு சென்றிருந்தேன். பின் சில நாட்களில் திருப்பூரில் உள்ள எனது முதலாளியை பார்க்க சென்று அங்கே வேலை செய்தேன். 

 

இப்போது மீண்டும் ஊருக்கு வந்தபோது என்னை பார்த்து எல்லோரும் அதிர்ச்சியடைந்துவிட்டன. ஆற்றில் மிதந்துவந்த உடலைக்கண்டு, நான் இறந்துவிட்டதாக நினைத்த என் குடும்பத்தினர் அதனை தகனம் செய்துள்ளனர்”என்றார்.

 

உயிருடன் உள்ள நபர் இறந்துவிட்டதாக கருதி யாரென்று தெரியாத உடல் தகனம் செய்யப்பட்ட இச்சம்பவம் குறித்து செம்பனார்கோவில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

title